2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். கோவில் வீதியிலுள்ள வீட்டில் திருட்டு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். கோவில் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 2 இலட்சத்து 2500 ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (24) திருடப்பட்டுள்ளது.
 
யாழ். சிறு குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராட்சி நேற்று வெள்ளிக்கிழமை (25) இதனைத் தெரிவித்தார்.
 
நாதஸ்வர கலைஞர்களாக மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் நேற்றிரவு உறங்கிக்கொண்டு இருந்த சமயம் அவர்கள் வீட்டிலிருந்த உபகரணங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
 
வீட்டு உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததினையடுத்து சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .