2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடந்த மாணவன் வைத்தியசாலையில்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
பாதசாரிகள் கடவையில் வீதியினைக் கடக்க முற்பட்ட 9 வயது மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கும் இராசையா பாலதீபன் என்ற மாணவனே படுகாயமடைந்தார்.
 
பாடசாலை முடிவடைந்த பின்னர் பாதசாரிகள் கடவையின் வழியே வீதியினைக் கடக்க முற்பட்ட போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மாணவன் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .