2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீட்டுப் பொருட்களுக்கு இனந்தெரியாதோர் தீ வைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் ஆலயப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் அறையிலிருந்த பொருட்கள் திங்கட்கிழமை (04) இனந்தெரியாதவர்களினால் எரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் விசேட நிகழ்வுவொன்று நடைபெறுவதற்காக வீட்டிலிருந்த பொருட்களை வீட்டு உரிமையாளர்கள் ஒரு அறைக்குள் ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த அறைக்குள் இருந்த பொருட்களுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டதில் அந்த அறையிலிருந்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின.

இரு குடும்பங்களுக்கிடையிலிருந்த பகையினாலேயே இவ்வாறு பொருட்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .