2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பட்டப்படிப்பு ஆரம்பம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பட்டப்படிப்பு வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான ஆலோசனைக் கல்விப் பயிற்சிப்பட்டறை திங்கட்கிழமை (11) நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் தலைமையில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இப்பயிற்சிப்பட்டறையினை ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு வருடங்களைக் கொண்ட இந்த பட்டப்படிப்பில் சிறுவர், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் எந்த சட்டங்களைப் பயன்படுத்துதல் என்பது தொடர்பாக கற்பிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் கணகே கருணாரட்ண, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் எஸ்.விஸ்வரூபன் உட்பட பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தலைவர் மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார்,

'சிறுவர் பெண்கள் அபிவிருத்தி ஆலோசகர்களுக்கான 100 வெற்றிடங்கள் இருப்பதினால் அதற்கு வடமாகாணத்தில்  உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான கோரிக்கை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்வதன் மூலம் அந்த வெற்றிடத்திற்கான தகுதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்படி அமைப்புக்கான அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்காக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம்' என அவர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .