2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம்

Kanagaraj   / 2013 நவம்பர் 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா,ரொமேஷ் மதுசங்க

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும்
தமிழத்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்புவதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பொது நூலகத்திற்கு  வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வாகனங்களை அங்கிருந்து நகரவிடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .