2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

த.தே.ம.மு. மெழுவர்த்தியேற்றி பிரார்த்தனை

Kanagaraj   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் மனித உரிமைகள் தின ஒன்று கூடல் நிகழ்வு இன்று (10) பிற்பகல் யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காணாமற்போனார்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளது விடுதலை நலனை வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டன.

நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்காக எழுதப்பட்ட மனுவும் இந்நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய  செயற்பாட்டாளரும் பிரபல சடத்தரணியுமான எஸ்.கந்தசாமி, அருட்பணி எஸ்.ராஜ்குமார், கட்சியின் உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .