2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


சமூக சேவைகள் அமைச்சு மஹிந்த சிந்தனை திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு  மாதாந்தம் வழங்கும்; கொடுப்பனவை முன்னேற்றகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (10) அநுராதபுரம் தலாவவில் ஆரம்பமானது.

இந்தச் செயலமர்வில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தினையும் சேர்ந்த சமூக சேவைகள் அதிகாரிகள், சமூக சேவைகள் அபிவிருத்தி அதிகாரிகள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்வரும் வியாழக்கிழமை (12) வரை நடைபெறவுள்ள இந்தச் செயலமர்விற்கு உலக வங்கி நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்தச் செயலமர்வின் சமூக சேவைகள் அமைச்சின் திட்டப் பணிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ராமமூர்த்தி, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஆலோசகர் கலாநிதி றிட்லி ஜெயசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்குகின்றனர்.

சமூக சேவைகள் அமைச்சு நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா 50 மாற்றுத்திறனாளிகளுக்கு திரிபியச என்னும் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 3000 ரூபா உதவித் தொகையை வழங்கி வருகின்றது.

உலக வங்கியின் நிதி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஆகியவற்றினாலேயே இக்கொடுப்பனவு வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தை எதிர்வரும் 2014ஆம் ஆண்டிலிருந்து மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது  தொடர்பாகவும், திட்டத்தினை அமுலாக்குவதிலுள்ள பிரச்சனைகளை ஆராயும் பொருட்டும்  இச்செயலமர்வு நடைபெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .