2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: உறவினருக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஊர்காவற்துறை பகுதியைச்சேர்ந்த 14 வயதான சிறுமியொருவர், உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற வேளையிலேயே அவரது உறவினர் ஒருவர் சிறுமியை நேற்று செவ்வாய்க்கிழமை துஷ;பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடமையை முடித்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு வந்தபோது குறித்த சிறுமி தனக்கு நேர்ந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்தே தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .