2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் விபத்து: ஏழு பேர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜனவரி 10 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


தனியார் பஸ் ஒன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஏழுபேர் காயமடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்த த.சுமனா (26), மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த எஸ்.தயாபரன் (42) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டர் வாகனமும் வல்லைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



(படங்கள் எஸ்.கே.பிரசாத்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .