2025 ஜூன் 25, புதன்கிழமை

அங்கவீனர்களுக்கான வசதிகளை செய்யாத கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்கு

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து கட்டிடங்களிலும் விசேட தேவையுடையவர்கள் பயணிக்க கூடியவகையில் வசதிகளை ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்தாதுவிடின் அக் கட்டிடங்களை நிர்வகிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரினால் கடந்த 21 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சுற்றுநிரூபம் நாடெங்குமுள்ள அரச,தனியார் கட்டிடங்கள், பிரபல்யமான இடங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அச்சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விசேட தேவையுடையவர்கள் உட்பிரவேசிப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பாக 2006 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 1467/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக விடுக்கப்பட்ட அறிவித்தல் திருத்தப்பட்டு 1619/24 என்ற இலக்கத்தில் 2009.09.18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக கட்டாயமானதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, விசேட தேவையுடையவர்களின் அமைப்பு  உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் 2014.10.16 ஆம் திகதிக்கு முன்னர் இந்த வசதிகளை ஏற்படுத்தப்படுதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .