2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறைக்கு புதிய கட்டிடத் தொகுதி

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினால் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு 27 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத் தொகுதியொன்று கிளிநொச்சி 155 ஆம் கட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் புதன்கிழமை (19) தெரிவித்தார்.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியினை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கட்டிட வேலைகள் பூர்த்தியாக்கப்படுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மீன்பிடித் திணைக்களம் தற்போது ஒரு தனியார் கட்டிடத்திலேயே இயங்கி வருவதாகவும் நிலையான கட்டிடத்தில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை இயங்குவதன் மூலம் கிளிநொச்சி மாவட்;டத்திலுள்ள 4000 மீனவக் குடும்பங்கள் நன்மையடைவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .