2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கடலை கொண்டு வந்தவரின் மகனும் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, ஐ.நேசமணி

பெண் ஊழியர் ஒருவர் கொண்டு வந்த கடலையினை பகிர்ந்து உண்டதினால் தெல்லிப்பளை வைத்தியசாலை ஊழியர்கள் ஐந்து பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று (19) காலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கடலையினைக் கொண்டு வந்த பெண் உத்தியோகத்தரின் மகனும் வாந்தி குமட்டல் ஏற்பட்ட நிலையில் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள், இன்று காலை உட்கொண்ட உணவு விசமாகியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பளை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த விடயம் தொடர்பாக பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் உண்ட கடலையின் மாதிரி எடுக்கப்பட்டு அதனை சோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்கள் அருந்திய தண்ணீரும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .