2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அரசரட்ணம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் மகா வித்தியாலயத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் 8.5 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட 6 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி புதன்கிழமை (26) திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தொகுதியினை யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் பிராந்திய அலுவலக திட்டமிடல் அதிகாரி திருமதி. விகடோரியா தலிஸ்கனொவா திறந்து வைத்தார்.

அத்துடன், பாடசாலையின் தேவைக்கென 2 இலட்சம் ரூபா பெறுமதியான மின்பிறப்பாக்கியொன்றும் இந்நிகழ்வில் வைத்து பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .