2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திரை

Kogilavani   / 2014 பெப்ரவரி 27 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

அகில இலங்கை ரீதியாகவுள்ள சிவாலயங்களை தரிசிப்பதற்காக துவிச்சக்கர போட்டிகளில் பங்குபற்றிய சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகியோர் சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று (27) காலை துவிச்சக்கரவண்டி யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய குரு சிவஸ்ரீ சபா வாசு தேவக்குருக்களினால் இந்த துவிச்சக்கர யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இந்த துவிச்சக்கர வண்டி யாத்திரியை ஆரம்பித்துள்ளதாக அவ் வீரர்கள் தெரிவித்தனர்.

யாத்திரையின் ஆரம்ப வைபவத்தில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நா.ஐங்கரன், ஆலய பரிபாலன சபையினர், அடியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .