2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அதிபரின் அலுவலகம் மற்றும் வீட்டின் மீது கல்வீச்சுத்தாக்குதல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரியும் அதிபரின் அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகத்திலுள்ள அவரது வீட்டின் மீது இனம்தெரியாத நபர்களால் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்டனர். இம் மாணவர்களுடன் தொடர்புடையவர்களே  இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்ட அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இக் கல்வீச்சுத் தாக்குதலில் அலுவலகத்தின் 6 ஜன்னல் கண்ணாடிகளும்  வீட்டின் 5 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளாகவும் இச்சம்பவம தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .