2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ். விபத்தில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். இருபாலை இராசவீதியில் டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

யாழ். அரசடி வீதி கந்தமடம் பகுதியைச் சேர்ந்த பொன்னர் தர்மரத்தினம் (62) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த வன்னிசிங்கம் (59) என்பவர் படுகாயமடைந்தார்.

இவ்விபத்தினையடுத்து டிப்பர் ரக வாகன சாரதியை கைதுசெய்ததுடன், குறித்த வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் கூறினர்.

கோப்பாயிலிருந்து இருபாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் உரும்பிராயிலிருந்து இருபாலைக்கு சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் இருபாலைச்சந்தியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். கோப்பாய் ஆதார வைத்திசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .