2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நாடகம் அரங்கேற்றுவதற்கு பொலிஸார் தடையில்லை: ஏ.எஸ்.பி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பழம்பெரும் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தடையில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரோரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (28) வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, ஊர்காவற்துறை தம்பட்டி பகுதியில் பண்டாரவன்னியன் நாடகத்தினை அரங்கேற்ற வேண்டாமென ஊர்காவற்துறை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவ்வாறு நாடகங்கள் நடத்தக் கூடாதென பொலிஸார் தடுக்க முடியுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊர்காவற்துறை தம்பட்டியில் பண்டார வன்னியன் நாடகத்தினை அரங்கேற்றுவதற்கு பொலிஸார் தடை என முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, வரலாற்று நாடகங்கள் அரங்கேற்றுவதை தடைசெய்ய முடியாதென்றும் அவர் மேலும் கூறினார்.

சிவராத்திரி தினத்தன்று அரங்கேற்றுவதற்காக கடந்த 25ஆம் திகதி ஊர்காவற்துறை இளைஞர்கள் பண்டாரவன்னியன் நாடகத்தினை ஒத்திகை பார்த்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் நாடகத்தினை ஒத்திகை பார்க்க தடை போட்டனர். அதனைத் தொடர்ந்து, அந்த நாடகத்தின் வசன நடையினையும், காட்சிகளையும் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .