2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய உற்சவத்திற்கான பணிகள் தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினையொட்டி குறித்தொதுக்கப்பட்ட பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் எந்தளவில் அந்த பணிகளை நிறைவு செய்துள்ளனர் என்பது தொடர்பிலான மதிப்பீடு ஆலய முன்றலில் நேற்று (28) நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் இந்த மதிப்பீடு நடைபெற்றது.

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திருவிழா எதிர்வரும் பங்குனி மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி 17ஆம் திகதி பொங்கலுடன் நிறைவடையவுள்ளது.

இந்த ஆலயத்தின் மஹோற்சவ தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருமளவான பொதுமக்கள் வருகை தருவார்கள்.

இதனால் ஆலயத்திற்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி, வீதி செப்பணிடல், ஆலயத்திற்கான பேரூந்து போக்குவரத்து ஏற்பாடு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, ஆலய சூழல் துப்பரவு செய்தல், வாகனங்கள் பாதுகாப்பு, வியாபார நடவடிக்கைகள், கழிவகற்றல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலர் எஸ்.முகுந்தனன், கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் எட்மன்மகேந்திர, கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரபாகரன், கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதிநிதிகள், வைத்தியர்கள், ஆலய பரிபாலன சபையினர், பிரதேச மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .