2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோபிதாஸிற்கு த.தே.கூ.வினர் அஞ்சலி

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


மகஸீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வடமராட்சி புலோலியிலுள்ள கோபிதாஸின் இல்லத்தின் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்துடன், கோபிதாஸின் இறுதிக் கிரிஜை நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அவரது உடலுக்கு அஞ்சில செலுத்தினார்கள்.

இதன்போது, கோபிதாஸின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கூடடமைப்பினர் தமது ஆறுதலையையும் தெரிவித்திருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .