2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சி.வி உள்ளிட்ட அறுவருக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2014 மார்ச் 19 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதற்கு எதிராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை செயலாளர், மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஆறு பேருக்கு அறிவித்தல் (நோட்டீஸ்) அனுப்புமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை(19) கட்டளை பிறப்பித்தது.

தன்னை பதவி நீக்க தீர்மானித்திருப்பதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை கருத்திலெடுத்த மேன்ணிறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் சிஸிர டி அல்விஸ் இந்த கட்டளையை பிறப்பித்தார்.
இந்த பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் முதலில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது இரண்டாம் தடவை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டது என வழக்குரைஞர் ஜே.சி.வெலியணின வாதிட்டார்.

உள்ராட்சி மன்ற நிலையியற் கட்டளைப்படி ஒரு வரவு-செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவியிழப்பார். ஆனால், இங்கு அவரது வரவு லெவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் வாதிட்டார்.

தலைவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைந்து செயற்பட பிரதேசசபை  செயலாளர் மறுத்ததனால் அவரின் பணிகளுக்கு தடைகள் ஏற்பட்டனவென அவர் முறையிட்டார்.

அங்கத்தவர்களில் பரிந்துரைகள் ஆராயப்படவில்லை. ஆதலால் தன்னால் முதல் கூறியப்படி 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ஆம் திகதி  வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்க முடியவில்லை என அவர் கூறினார்.

ஜனவரி 2014 இல் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய தான் கூட்டமொன்றை நடத்தியதாகவும் இதில் வரவு செலவுத்திட்டம்  தோற்கடிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கூட்டத்தை நடத்தும்படி கூறியது கட்டத்துக்கு முரணானது எனவும் அவர் முறையிட்டார்.

வர்த்தமானியில் தன் பதவி நீக்கம்பற்றி முதலமைச்சர் வெளியிட்ட தீர்மானத்தையும் பிரதேச சபை செயலாளரின் தீர்மானத்தையும் உள்ராட்சி மன்ற ஆணையாளரின் தீர்மானத்தையும் வலிதாக்கும்படி முறைப்பாட்டாளர் கேட்டுள்ளார்.

இதனையடுத்தே மேற்குறிப்பிட்ட அறுவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள தீர்மானித்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .