2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் இருவர் கரையொதுங்கினர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ். காரைநகர், சாம்பலோடை கடற்கரையில் படகொன்றில் இந்திய மீனவர்கள் இருவர்  செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை கரையொதுங்கியதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் கல்லாறு பகுதியைச்  சேர்ந்த 38 வயதான ஒருவரும் 13 வயதுச் சிறுவன் ஒருவனுமே கரையொதுங்கினர்.

திங்கட்கிழமை (31) மாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு வந்த இவர்களின் வலைகளை ரோலர் படகுகள் அறுத்ததன.  இதனால்,  தங்களது வலைகளை  இவர்கள் தேடித்திரிந்த நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்தது. இதனைத் தொடர்ந்து  இரவு முழுவதும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கரையொதுங்கியதாகவும் கடற்படையினர் கூறினர்

இவர்களிடம்  தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் இவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .