2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிச் சென்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ். தென்மராட்சிப் பகுதியிலிருந்து டிப்பர் ரக வாகனமொன்றில் அனுமதிப்பத்திரமின்றி  மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தாகக் கூறப்படும்  ஒருவரை கோப்பாய்ச் சந்தியில்  நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 35 வயதான இச்சந்தேக நபர் செலுத்திவந்த  டிப்பர் ரக வாகனத்தை வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்  சோதனையிட்டபோது, அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டுசெல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

தற்போது குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .