2025 ஜூலை 12, சனிக்கிழமை

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.சோமசுந்தரம் (வயது 74) என்பவரே படுகாயமடைந்தவராவார். மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸாரும், இராணுவ பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .