2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவருக்கு அபராதம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கபிலன் செல்வநாயகம்

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்தபோது கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தே நபருக்கு, சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன்,  50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

கடந்த ஜனவரி மாதம் கெற்பேலி பகுதியில் சட்டவிரோதமான முறையில், உழவு இயந்திரத்தில் மண் அகழ்ந்த போது கொடிகாமம் பொலிஸார் இவரைக் கைது செய்;தனர்.

கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கினை விசாரித்த நீதவான் மேற்படி அபராத தொகையினை செலுத்துமாறு உத்தரவிட்டதுடன் மணலை பறிமுதல் செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .