2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குடும்பஸ்தர் அடித்து கொலை: ஒருவர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கபிலன் செல்வநாயகம்

அல்வாய் வடக்கு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்பவர் சனிக்கிழமை (25) அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு அயல் வீட்டிக்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை துரத்திச் சென்ற போது, அந்தக் கும்பல் இவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .