2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் கோஷ்டி மோதலில் இருவர் காயம்; மூவர் கைது

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.சுன்னாகம் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு, இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் பொல்லுகள் கொண்டு, இரு கோஷ்டிகளும் துரத்தித் துரத்தி தாக்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மூவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டனர்.  

இந்தக் கைகலப்பில் இருவர் காயமடைந்து, அவர்கள் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .