Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 5 பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை(27) தீர்ப்பளித்தார்.
மானிப்பாய் பொலிஸாரும், கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து கடந்த 04ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவு பகுதியில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை, திங்கட்கிழமை(27) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago