2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கடலட்டைகளை திருடிய இருவருக்கு அபராதம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மண்கும்பான் 4ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள கடலட்டை வளர்ப்பு பண்ணைக்குள் நுழைந்து, 13 கடலட்டைகளை திருடிய இருவருக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர்கள் இருவரிடமும் இருந்த கடல் அட்டைகளை யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆழ்கடலில் விடுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

சிவநாதன் றொபின்சன் என்பவருடைய கடலட்டை வளர்ப்பு பண்ணையில் தலா 1500 ரூபாய் பெறுமதியான 13 கடலட்டைகள், கடந்த 20 ஆம் திகதி இரவு திருடப்பட்டன.

பண்ணை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குருநகர் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சந்கேநபர்கள் இருவம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .