2025 ஜூலை 12, சனிக்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்லைப் பகுதியிலிருந்து அச்சுவேலிக்கு சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்றவரை சனிக்கிழமை (02) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிப் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸார், உழவு இயந்திரத்தை மறித்து சோதனை செய்தபோது, அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், உழவுஇயந்திரத்துடன் கூடிய மணலும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (03) நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .