2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆலயத்துக்கு சென்றவர்களின் வீட்டில் திருட்டு

Gavitha   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை உள்நுழைந்து வீட்டிலிருந்து பணம், நகை மற்றும் உடமைகள் என 3 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் ஆலயமொன்றுக்குச் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 56 ஆயிரம் ரூபாய் பணம், 5 பவுண் நகை, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி ஆகிய இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர் திங்கட்கிழமை (01) செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .