Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 15 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் மேலும் 25 குடும்பங்களுக்கு யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தினூடாக தற்காலிக வீட்டுத்திட்டத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிராம அலுவலர் பிரிவில் மீளக்குடியமர்வதற்காக 113 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், முதற்கட்டமாக 24 குடும்பங்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான அனுமதி மே மாதம் 27ஆம் திகதி வழங்கப்பட்டது. வீடுகளின் அத்திபாரங்கள் அமைப்பதற்காக 2 கியூப் கற்கள் வழங்கப்பட்டு கட்டட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் 25 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
35 minute ago