2025 ஜூன் 28, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய பெண் கைது

Thipaan   / 2015 ஜூன் 22 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மயிலங்காடு பகுதியில் பிட்டு பானைக்குள் கசிப்பு காய்ச்சிய பெண்ணொருவரை திங்கட்கிழமை (22)கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெண்ணின் வீட்டுக்குச் சென்று பெண்ணைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

அவரிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குத் தேவையான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்து, பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .