2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆசிரியர் கலாசாலைகளுக்கு மீள்பரீட்சை

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஆசிரிய கலாசாலைகளுக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடத்தும் மீள்பரீட்சை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஊடாக மீள்பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்;டைகள், கலாசாலைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவற்றை கலாசாலை அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கலாசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

பரீட்சை தொடர்பான நேரசூசி கலாசாலையின் விளம்பரப் பலகையில் இடப்பட்டுள்ளது என்றும் விபரங்கள் தேவைப்படுவோர் தமக்குரிய பாடங்களைக் குறிப்பிட்டு கலாசாலையின் தொலைபேசி இலக்கமாகிய 021 - 2230323 ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .