Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒரே தீர்மானத்தில் உள்ளன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
'ஐ.நா அறிக்கை செப்டெம்பர் மாதம் வருமா அல்லது இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு பிற்போடப்படுமா என்ற பாரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளை ஏற்று கொள்வது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்துள்ளோம். ஐ.நா விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
இலங்கை அரசாங்கம் ஐ.நா அறிக்கையை பிற்போட வைக்க இலங்கையில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று புனைகதைகளைக் கூறி அறிக்கை வெளிவரவிடாமல் முழுமுயற்சி எடுக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளிவர வேண்டும் என்பதில் தீர்க்கமாகவுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025