2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மேடையில் குடும்ப விடயம்; குழம்பிய பிரசாரம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

தேர்தல் பிரசார மேடையில் குடும்ப விடயம் கதைக்கப்பட்டமையால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவம், நேற்று வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டம் யாழ்.நகரப்பகுதியில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பிரசாரத்தில் ஈடுபட்டவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் 21 வயதுடைய பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடியுள்ளார். அவருக்கு பல தகாத தொடர்புகள் இருக்கின்றன என பிரசாரம் செய்தார்.

குறிப்பிட்ட 50 வயதுடைய நபரின் நெருங்கிய உறவுக்காரர்கள், பிரசாரம் மேடை அமைக்கப்பட்ட பகுதியில் வசித்தமையினால் தங்கள் உறவுக்காரரை மேடையில் அவதூறாக பேசியதை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டதுடன், தொடர்ந்து பிரசாரம் நடத்த அவர்கள் அனுமதிக்கவில்லை.

அவர்களுடன் இன்னும் ஆட்கள் சேர்ந்ததையடுத்து, குறித்த பிரசாரத்தை நிறுத்திவிட்டு பிரசாரம் செய்தவர்கள் சென்றுவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .