Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மீசாலை பகுதியில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட வான் சாரதி மற்றும் விற்பனையாளரை தாக்கிய சந்தேக நபர்கள் இருவர், நேற்று வெள்ளிக்கிழமை (14) சாவகச்சேரி நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 05ஆம் திகதி மீசாலை பகுதியில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை மறித்த சிலர் சாரதி மற்றும் விற்பனையாளரை தாக்கியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை அன்றையதினமே கைது செய்து மறுநாள் சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, நீதவான், குறித்த ஐவரையும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவ் இருவரும் நேற்று (14) சாவகச்சேரி நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
இதனையடுத்து நீதவான் ஆஜரான இருவர் உட்பட ஏழு பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025