2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலத்தை  கோப்பாய் பொலிஸார் மீட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி, அரசடி அம்மன் வீதியைச் சேர்ந்த யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தரான அருளானந்தம் கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

குறித்த நபர், அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில், சில தினங்களாக அவருடைய நடமாட்டத்தை அயலவர்கள் காணாத நிலையில், அவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் பார்த்த போது குறித்த நபர் சடலமாக கிடந்துள்ளார். அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பாகவே உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது, யாழ். போதனா வைத்தியசாலையில் பிரத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .