2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலைக்குச் சொந்தமான பஸ் மீது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) திருநெல்வேலிச் சந்திக்கு அருகாமையால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பஸ் யாழ்.நகரில் பயணிகளை இறக்கிய பின்னர் கோண்டாவில் சாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் இந்த கல்வீச்குத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .