2025 ஜூன் 21, சனிக்கிழமை

அருந்தவபாலனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை

George   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்;டத்தில் போட்டியிட்டு 42 ஆயிரத்து 925 வாக்குகள் பெற்ற கந்தையா அருந்தவபாலனை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத் தலைவர் வ.ஸ்ரீபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருந்தவபாலனை தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனக்கோரி சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத்தால் இன்று வியாழக்கிழமை (20), சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்த ஏற்பாடாகியுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "நடராஜா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பின்னர் எமது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இருக்கவில்லை. அருந்தவபாலன் 1977ஆம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியில் உள்ளார்.

அவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, ஆசனம் கிடைப்பதாக இருந்தும் இறுதியில் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்படதால் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை" என்றார்.

இம்முறை தேர்தலிலும் கூட்டமைப்புக்கு கிடைத்த 5 ஆசனங்களில் அருந்தவபாலன் உள்ளடங்கியுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சரவணபவன் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மூலம் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தென்மராட்சி மக்களிடத்தில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் உட்கட்சிக்குள் இருக்கும் விடயங்கள் தொடர்பில் மக்களிடத்தில் சந்தேகம் உள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் உட்கொண்டுவரமுடியும் என தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டுக்கொள்கின்றோம். இதனை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .