Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மானிப்பாய், வேலக்கை பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பொருட்களை திருடிய சந்தேகநபரை புதன்கிழமை (19) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் தெரிவித்தார்.
குற்றத்தடுப்பு பொலிஸாருக்க கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மானிப்பாய் நகரப்பகுதிக்கு சென்ற பொலிஸார் திருடிய பொருட்களை தன் வசம் வைத்திருந்த சுதுமலை பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரை கைது செய்தனர்.
கடந்த வாரம் இரவு குறித்த கோயில் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ள சந்தேகநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பொருட்களை திருடி சென்றிருந்தனர்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையிலேயே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்இ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago