2025 ஜூன் 21, சனிக்கிழமை

மர்மப் பொருள் வெடித்ததில் கணவன், மனைவி படுகாயம்

George   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் வெள்ளிக்கிழமை (21) காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 27), வர்ணன் பேபிராணி (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதில் மனைவி முகத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தங்கள் வீட்டு வளவை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பைக்குள் இருந்து மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சாகவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .