Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மல்லாவி பொலிஸ் நிலையத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சில முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு பொலிஸார் பின் நிற்பதாகவும் பாதிக்கப்பட்ட தரப்புக்களால் குற்றம் சாட்;டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்;தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு பொதுவாக அமைந்துள்ள மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களால் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, கரும்புள்ளியான் பகுதியில் கடந்த 12ஆம் திகதி இரவு 11 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த ஐந்து பேர் அங்கிருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் நவரத்தினம், 60 வயதுடைய சுப்பிரமணியம் செல்வரத்தினம் ஆகிய இரண்;டு வயோதிபர்களை கடுமையாகத்தாக்கி படுகாயப்படுத்திய நிலையில் குறித்த இருவரும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இது தொடர்பான ஐந்து சந்தேக நபர்களையும் அயலவர்கள் அடையாளம் காட்டிய போதும் அவர்களை இதுவரை கைது செய்வதற்கு பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
குறித்த ஐந்து சந்தேக நபர்களும் பல்வேறு கொள்ளைச்சம்பவங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வரும் ஒரு குழுவாகவே இவர்கள் உள்ளது என்றும் குறித்த குழுவினர் பொலிஸாரின் உதவியுடன் கால்நடைகள் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் தொடர்பாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு பொலிஸார் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. இதனால் தமக்கு பல்;வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மல்லாவி பொலிஸாரை தொடர்புகொண்டு கேட்ட போது,
முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025