2025 ஜூன் 21, சனிக்கிழமை

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சிறுவன் ஒருவன், ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டு 3 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டத்தரிப்பு சாந்தையைச் சேர்ந்த 6 வயதுடைய சிவனேஸ்வரன் டிலிந்தன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காய்ச்சலால் பிடிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .