2025 ஜூன் 21, சனிக்கிழமை

எரிந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

George   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். திருநெல்வேலி கேணியடி ஞான வைரவர் ஆலயத்துக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் சனிக்கிழமை(22)  மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடியபாதம் வீதி, கேணியடியை சேர்ந்த சின்னமுத்து கைலாசம் (வயது 75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் தீப்பெட்டி ஒன்றும் காணப்பட்டதுடன் வீடும் உட்புறமாக பூட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .