2025 ஜூன் 21, சனிக்கிழமை

22ஆம் திகதி ஆட்சி அமைப்போம்: எம்.எம்.சிராஸ்

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.எம்.சிராஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"வட மாகாண சபைத் தேர்தலில் மக்களிற்கு சேவையாற்றுவதற்காக நான் போட்டியிட தீமானித்தேன்.  சேவையே எனக்கு முதலாவது கடமையாக இருக்கின்றது. இன்றும் நான் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிவிட்டே இங்கு வருகை தந்துள்ளளேன்.

மக்களிற்கு உதவுமாறு வெளிநாடுகளில் உள்ள எனது நண்பர்களான பல தொழிலதிபர்கள் வேண்டுகோள்விடுத்து வருகின்றனர். இதனால் கிராமப் புறங்களிற்குச் சென்று அங்கு வாழும் மக்களிற்கு என் தேவை குறித்து ஆராய்ந்து அந்த தேவைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்கி வருகின்றேன்.

இவ்வாறான சேவைகளை நான் அரசியலுக்கு வர முன்னரும் செய்திருக்கின்றேன் அது அரசியலை நோக்காகக்கொண்டு செய்யப்பட்ட வேலைகள் அல்ல. ஒரு சமூக சேவை இருந்தும் அரசியல், அரசியலுக்கு அப்பாலும் தமிழ் பேசும் அனைத்து மக்களிற்கும் எனது பணிகள் தொடரும்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள கிராமங்கள் அனைத்தையும் முன்னுக்குகொண்டு வரும் வேலைத்திட்டத்தை  நான் தற்போது முன்னெடுத்து வருகின்றேன். இதற்காக கிராமங்களில் 1,000 மலசலகூடங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .