2025 மே 17, சனிக்கிழமை

24 மணிநேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 36 பேருக்கு எதிராக யாழில் வழக்கு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரப்பகுதியில் 24 மணிநேரத்திற்குள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 36 பேர் மீது யாழ். போக்குவரத்து பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிராகாரம் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச 36 பேருக்கு 1,52,000 ரூபா அபராதம் விதிக்க தீர்ப்பளித்தார். 

இதேவேளை யாழ்.நகரில் போக்குவரத்து விதிகளை பொலிஸார் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு யாழ்.போக்குவரத்து பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .