2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

25 லட்சம் ரூபா பணமோசடி: ஒருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

25 லட்சம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் தனது சொந்தத் தேவைக்காக கைமாறாக குறித்த தொகை பணத்தினை வாங்கியுள்ளார்.

இவர் பல வருடமாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமையினால் பணத்தினை கொடுத்த நபர் யாழ். விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .