2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

27இல் தீபமேற்ற தடையில்லை: பொலிஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பாரம்பரிய பண்டிகைகள் மக்கள் கொண்டாடுவதற்கு தடைவிதிக்கமாட்டோம். கார்த்திகை தீபத்திருநாளான 27ஆம் திகதி அன்று ஆலயங்களிலோ, வீடுகளிலோ தீபம் ஏற்ற வேண்டாம் அல்லது மணி ஓசை எழுப்ப வேண்டாம் என யாருக்கும் உத்தரவிடவில்லை என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்புகையில்,

எதிர்வரும் 27ஆம் திகதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் மாவீரர் தினமாக இருக்கின்ற காரணத்தினால், வன்னியில் தீபமேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலும் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? என வினவினர். 

அதற்கு பதிலளித்த அவர், 'கார்த்திகை தீபத்திருநாள் அன்று ஆலயங்களிலோ அல்லது வீடுகளிலோ தீபம் ஏற்ற வேண்டாம் என யாருக்கும் உத்தரவு போடவில்லை. தமிழ், சிங்கள பாரம்பரிய கலாசார வைபவங்களுக்கு தடை விதிக்க முடியாது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .