2024 மே 17, வெள்ளிக்கிழமை

3 உணவகங்களுக்கு சீல்

Janu   / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன. அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு , குறைகளை சீர் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .

மறுபரிசோதனைக்காக திங்கட்கிழமை (29)  குறித்த உணவகத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததையடுத்து , மூன்று உணவக உரிமையாளர்களுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன்  , அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவாக சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்கு சீல் வைக்கமாறு உத்தரவிட்டுள்ளது.

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .