2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

335 பேரூக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வடமாகாணத்தில் டிப்பிளோமா பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்ய 335 பேரூக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு இந்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.

உடற்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடநெறிகளைக் பூர்த்தி செய்தவர்களுக்கே இந்  நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் உடற்கல்வி பாடத்தினைக் கற்ற 132 பேரூக்கும்  ஆங்;கில பாடத்தினைக் கற்ற 105 பேரூக்கும் தொழிற்நுட்ப பாடத்தினைக் கற்ற 98 பேரூக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு 28 சிங்கள மாணவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .